Menu

சிகிச்சை

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்

உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி

சிறுநீரக மாற்று சிகிச்சையை ஊக்குவிப்பதும் சிறுநீரக தான சட்டத்தை ஆதரிப்பதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே 1970-களின் ஆரம்பம் முதல் என்கேஎப்-யின் முக்கியத் தொண்டாக இருக்கிறது. சிறுநீரக தானத்தை ஊக்குவிப்பதற்கான என்கேஎப்-யின் விடாமுயற்சிகளில் “உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி”யும் ஒன்று. இது சிறுநீரக மாற்று சிகிச்சையை ஊக்குவிக்கிறது. இந்த சிகிச்சை வாழ்நாளை அதிக பட்சம் நீட்டிக்கவும் தரமான வாழ்க்கை வாழவும் வழிசெய்கிறது.

பொதுவாகக் கேட்கும் கேள்விகள்

1. "என்கேஎப்-யின் உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி" என்றால் என்ன?

இது $10 மில்லியன் நிதியாகும். குறைந்தபட்ச வருவாய் உள்ள நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் உயிருள்ள ஒருவரைத் தனது அன்புக்குரியவருக்கு சிறுநீரக தானம் செய்யும்படி ஊக்குவிப்பற்காக இது ஏற்படுத்தப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சை சட்டம் (HOTA) திருத்தம் செய்யப்பட்டதற்கு ஏற்ப நவம்பர் 1, 2009 முதல் இந்த நிதி உதவி அமலுக்கு வந்தது.

2. உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி பெறுவதற்கான தகுதிகள் என்ன?

அரசு மருத்துவமனைகளால் (restructured hospitals) சிபாரிசு செய்யப்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமைப் பெற்றவர்கள் மட்டுமே இந்த நிதியுதவிக்காக விண்ணப்பிக்க முடியும். அவர்கள் என்கேஎப்-யின் வருவாய் பரிசோதனை விதிக்கு உட்பட வேண்டும். உயிருள்ள நபரின் சிறுநீரக தானத்தை ஊக்குவிப்பதற்காக, உதவி பெறுபவர் மட்டுமே என்கேஎப்-யின் வருவாய் பரிசோதனை விதிக்கு உட்படுமாறு எதிர்பார்க்கப்படுகிறது.

3. இந்த நிதியில் எவையெல்லாம் உட்படும்?

பின்வருபவை உட்படும்:

  • சிறுநீரக தானம் பெறும் ஒருவருக்கு, தானம் செய்ய சாத்தியமுள்ள இரண்டு நபர்களின் ப்ரீ-டிரான்ஸ்ப்ளான்ட் ஸ்கிரீனிங் மற்றும் மதிப்பீட்டுச் செலவுகள்.
  • அரசு மருத்துவமனை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட வருடாந்திர உடல்நல ஸ்கிரீனிங் மற்றும் பின்தொடருகிற சிகிச்சை செலவுகள்.
  • இரண்டு மாத வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஒரு முறை கொடுக்கப்படும் தொகை அல்லது $8,500, இவற்றில் எது குறைவோ அது.
  • மருத்துவமனையில் அனுமதி மற்றும் அறுவை சிகிச்சைக்கான காப்பீட்டு தவணைகளின் செலவை ஈடு செய்தல் (மெடிஷீல்ட் லைப் தொகை ஈடு செய்தலின் வரம்புக்குட்பட்டது).
  • க்ரூப் லிவிங் பாலிஸி திட்டத்தின் அடிப்படையில் $200,000 -க்கு காப்பீடு செய்யப்பட்ட தொகை.
4. 'க்ரூப் லிவிங் பாலிஸி'-யில் எவையெல்லாம் உட்படும்?
  1. மாரடைப்பு
  2. புற்றுநோய்
  3. மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
  4. குருட்டுத்தன்மை
  5. முடக்குவாதம்
  6. ஃபுல்மினன்ட் ஹெபடைடிஸ்
  7. பக்கவாதம்
  8. சிறுநீரக செயலிழப்பு
  9. முக்கிய உறுப்பு மாற்று சிகிச்சை
  10. கரோனரி தமனி நோய்
  11. அல்சைமர் நோய்
  12. பெருந்தமனி அறுவை சிகிச்சை
  13. கோமா
  14. செவிட்டுத்தன்மை
  15. இருதய வாழ்வு அறுவை சிகிச்சை
  16. பேச்சுத் திறன் இழத்தல்
  17. அதிகபட்ச தீக்காயங்கள்
  18. இறுதிக் கட்ட நோய்
  19. அப்ளாஸ்டிக் அனீமியா
  20. ப்ரைமரி பல்மனரி ஆர்ட்டரியல் ஹைபர்  டென்ஷன்
  21. நாள்பட்ட நுரையீரல் நோய்
  22. நாள்பட்ட கல்லீரல் நோய்
  23. மோட்டர் நியூரான் நோய்
  24. மஸ்குலர் டிஸ்ட்ராபி
  25. பார்க்கின்ஸன் நோய்
  26. ஆன்ஜியோப்ளாஸ்டி
  27. மூளையுறை அழற்சி
  28. தீங்கற்ற மூளை கட்டி
  29. மூளை வீக்கம்
  30. இரத்தமேற்றியதால் வரும் எய்ட்ஸ்
5. 'க்ரூப் லிவிங் பாலிஸி' எப்போது அமலுக்கு வரும்?

காப்பீடு அளிப்பவரின் அங்கீகாரத்தைப் பொறுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நாளிலிருந்து 12 வாரங்கள் கழித்து அமலுக்கு வரும்.

6. 'க்ரூப் லிவிங் பாலிஸி'-யில் சிறுநீரக தானம் செய்வர் பணம் கட்ட வேண்டுமா?

சிறுநீரக தானம் செய்பவரின் ‘க்ரூப் லிவிங் பாலிஸி’ தொகைக்காக என்கேஎப் முழு மானியம் வழங்கும்.

7. 'க்ரூப் லிவிங் பாலிஸி' திட்டத்தின்கீழ், சிறுநீரக தானம் செய்த உயிருள்ள நபர் எத்தனை வருடங்களுக்கு காப்பீடு பெறுவார்?

இந்தக் காப்பீட்டுத் தொகை அவருக்கு அதிகபட்சமாக 69 வயது வரை, அதாவது கடந்துபோன பிறந்த நாள் 69-ஆக இருக்கும் வரை கிடைக்கும். உதாரணமாக, சிறுநீரக தானம் செய்த சமயத்தில் அவருக்கோ அவளுக்கோ 50 வயது என்றால், அவர் 19 வருடங்களுக்கு (க்ரூப் லிவிங் பாலிஸி-யின் வயது வரம்புபடி 69 வயது) காப்பீடு பெறுவார்.

8. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால், தானம் செய்தவருக்கு யார் ஈடு செய்வார்?

தானம் செய்கிற ஒவ்வொரு நபரும், அறுவை சிகிச்சைக்கு முன்பு மெடிஷீல்ட் காப்பீடு எடுக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். அப்படிச் செய்தால், மருத்துவமனை அனுமதி மற்றும் அறுவை சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் மெடிஷீல்ட் ஈடு செய்யும். வருவாய் பரிசோதனை விதிக்கு உட்பட்டிருந்தால், அதன்படி என்கேஎப் அவருடைய காப்பீட்டு தவணைகளை ஈடு செய்யும்.

9. $10 மில்லியன் தொகை தீர்ந்துவிட்டால், அது மறுபடியும் சேகரிக்கப்படுமா?

$10 மில்லியன் என்ற ஆரம்ப நிதி என்கேஎப்-யின் உபரி கையிருப்புத் தொகையிலிருந்து வருகிறது. அது தீர்ந்துவிட்டால், இந்தத் திட்டத்துக்காக நிதி உயர்த்த என்கேஎப் முயலும்.

விண்ணப்ப படிவங்கள்:

சிறுநீரக மாற்று சிகிச்சை

சிறுநீரகம் மாற்றி வைப்பதுதான் உள்ளதிலேயே மிகச் சிறந்த சிகிச்சை. ஏனென்றால், மாற்றிவைக்கப்பட்ட சிறுநீரகம் செயலிழந்த சிறுநீரகத்துக்குப் பதிலாக கிட்டத்தட்ட முழுமையாக செயல்படுகிறது, இதனால் நோயாளியால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது.

நம்பிக்கையும் நன்றியும் சந்திக்கும்போது

சிறுநீரக மாற்று சிகிச்சைக்குக் குரல்கொடுத்து வாழ்வும் நம்பிக்கையும் அளித்த மகத்தான அனுபவமுள்ள எங்களுடைய நோயாளிகளையும் அவர்களுடைய அன்புக்குரியவர்களையும் சந்தியுங்கள். (ஆங்கிலத்தில் எழுதப்பட்டது)

மாற்றுச் சிறுநீரகம் பெற்றவர்களுக்கான ஆரோக்கிய உணவு

முழு உடலின் ஆரோக்கியத்துக்கும் மாற்று சிறுநீரகம் நன்றாக வேலை செய்வதற்கும் ஆரோக்கியமான சரிவிகித உணவு மிகவும் முக்கியம். மாற்றுச் சிறுநீரகம் பெற்றவர்களுக்கான ஆரோக்கிய உணவு

மாற்றுச் சிறுநீரகம் பெற்றவர்கள் உடல் வலிமை காக்க

மாற்றுச் சிறுநீரகம் பெற்றவர்கள் உடற்பயிற்சி செய்வது, இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைச் சீராக்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top

Notice

Friends of NKF and Donation Portal will undergo scheduled maintenance on 16th March 2025 (Sunday) and 13th April 2025 (Sunday) from 8am to 8pm. These sites will not be available during this period. 

We apologise for any inconvenience this may cause.